தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னதாக ஆரம்பிமாகியுள்ளது.
தென்மராட்சி சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் குறித்த உண்ணாவிரதம் சற்று முன்னதாக ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் மாவை சேனாதிராசா, சிறிதரன், சீ.வீ.கே.சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன், சரவணபவன், கஜதீபன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சசிகலா ரவிராஜ், க.சுகாஷ், உள்ளிட்ட பலர் குறித்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், தென்மராட்சி